புதிதாக மேம்படுத்தப்பட்ட ஜி மெயில் ஆண்ட்ராய்டு ஆப்பில் இந்தவசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கனவே இணையதள வாடிக்கையாளர்களுக்கு ஜி மெயில் வழங்கியிருந்தது.
இந்தவசதியை பயன்படுத்தி ஒருவரின் ஈமெயில்-யை நிறுத்தும்போது(Block) அவர் அனுப்பும் அணைத்து தகவல்களும் நேரடியாக ஸ்பாம் (Spam) பகுதிக்கு மாற்றிவிடப்படும். இதன் மூலம் தேவையற்ற மெயில்-கலை தடுத்து நிறுத்தலாம் . தவறுதலாக நிறுத்தப்பட்ட ஈமெயில் முகவரியை விடுவிக்கவும் ஜிமெயில் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறு தடுத்து நிறுத்தப்படும் போது , மெயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அனுப்பியவர்களுக்கு தெரியப்படுத்தபடாது என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.
ஜிமெயில் இணையதள வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இந்த வசதி ஜி-மெயில் ஆண்ட்ராய்டு ஆப்பில் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
Post a Comment